குறைந்தபட்ச நிறைவெண்ணாக இரண்டாயிரம் பேரைத் தனது முதலாவது ஆண்டிலும் (2022), ஆரம்ப காலமான ஐந்து வருடங்களுக்குள் (2027) சீரிய நிறைவெண்ணாக இருபதாயிரம் பேரைத் தவணைக்கட்டணம் செலுத்துவோராக அனைவரின் பங்களிப்போடும் ஈழக்காண்பியால் பெற்றுக்கொள்ள முடியுமானால், அதை ஈழத்தமிழர்களுக்குப் பொதுவான ஓர் உலகளாவிய திரைத்துறை காத்திரமான முறையில் உருவெடுப்பதற்கான ஒரு மைல்கல் நிகழ்வாகக் கொள்ளலாம் என்பது இம்முயற்சியின் ஆரம்பகர்த்தாக்களின் கணிப்பு.