1. நீங்கள் திரைப்பட இயக்குநரா?
  2. நீங்கள் முழுநீளத் திரைப்படம் அல்லது ஆவணப்படம் இயக்குபவராயின்:

    1. உங்களிடம் ஏலவே முழுமையான திரைக்கதை இருக்கும் பட்சத்தில்.

      1. முதலில் Logline மற்றும் Synopsis உள்ளடங்கிய Pitch Deck ஐ எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். உங்கள் விண்ணப்பம் முழுமையானதாகவும் தயாரிப்புச் சாத்தியமானதாகவும் ஈழக்காண்பியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில் 14 நாட்களுக்குள் உங்களிடமிருந்து மேலதிக விபரங்கள் கோரப்படும்.

      2. உங்கள் Pitch Deck மேற்குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு திருப்தி அளிக்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் உங்களிடமிருந்து Treatment கோரப்படும், Treatment குறைந்தது 40 A4 பக்கங்கள் கொண்டதாக இருத்தல் வேண்டும். Treatment ஐ அனுப்பும்போது, அத்துடன் எம்மிடமிருந்து கிடைக்கப்பெற்ற NDA (Non-disclosure agreement) ஐயும் கையொப்பமிட்டு திருப்பி அனுப்பிவைக்கவும். Treatment ஐ மூவர் கொண்ட அநாமதேய குழு பார்வையிட்டும்.

      3. Treatment திருப்தி அளிக்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் உங்களிடமிருந்து முழு திரைக்கதையும் கோரப்படும். முழுத்திரைக்கதையினை NDA (Non-disclosure agreement) யுடன் அனுப்பிவைக்கவும். தேவைப்படின் Script Doctoring மற்றும் Script Consulting வழங்கப்படும்.

      4. ஈழக்காண்பியால் தெரிவு செய்யப்படும் தயாரிப்பாளர் அத் திரைப்படத்திற்கான இலக்குப் பார்வையாளர்கள் மற்றும் தயாரிப்புக்கு தேவைப்படும் மொத்த நிதியினைத் தீர்மானிப்பார்.

      5. ஊதியங்கள் உறுதிசெய்யப்பட்டு, தேவையான ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

      6. இயக்குநரும் தயாரிப்பாளரும் இணைந்து நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத்தளம் (location) போன்றவற்றை முடிவெடுப்பர்.

      7. முன் தயாரிப்பு, தயாரிப்பு மற்றும் பின் தயாரிப்பு வேலைகள் இடம்பெறும்.

      8. முன்பே உறுதிசெய்யப்பட்ட இலக்குப் பார்வையாளர்களை ஈழக்காண்பி ஊடாகவோ, சர்வதேசத் திரைப்பட விழாக்கள் ஊடாகவோ, இரண்டினூடாகவோ அல்லது வேறு வழிகள் ஊடாகவோ அத் திரைப்படம் விநியோகிக்கப்படும்.


    2. எமது திரைக்கதை வங்கியிலிருந்து, திரைக்கதையினைத் தெரிவு செய்து இயக்க விரும்பின் உங்கள் சுயவிபரக் கோவையுடன் முந்தைய படைப்புகளின் இணைப்புகளையும் இணைத்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
      குறிப்பு: பொதுவெளியில் உள்ள படைப்புகளை மட்டும் அனுப்பவும், இதுவரையில் வெளிவராத அல்லது பிரத்தியாகமான படைப்புகளை அனுப்புவதைத் தவிர்க்கவும். நீங்கள் பகிரும் படைப்புகளின் உரிமம் உங்களுடையதாக இருத்தல் வேண்டும் அல்லது சட்ட ரீதியான உரிமம் பெற்றபின் அனுப்பிவைக்கவும்.


  3. நீங்கள் புத்தாக்கத்திறன் உடையவரா?
  4. உங்களிடம் புதியதும் படைப்பாற்றல் மிக்கதுமான படைப்புகளுக்கான எண்ணம் இருப்பின்.

    1. முதலில் உங்கள் எண்ணத்தை உள்ளடக்கிய Pitch Deck ஐ எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். உங்கள் விண்ணப்பம் முழுமையானதாகவும் தயாரிப்புச் சாத்தியமானதாகவும் ஈழக்காண்பியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில் 14 நாட்களுக்குள் உங்களிடமிருந்து மேலதிக விபரங்கள் கோரப்படும்.


  5. நீங்கள் முதலீட்டாளரா?
  6. எமது திரைக்கதை வங்கியில் ஏலவே தயாரித்தவை மற்றும் தயாரிப்பில் உள்ளவை தவிர, தற்போது 16 திரைக்கதைகள், Script councling மற்றும் doctoring செய்யப்பட்டு தயாரிக்கக் கூடிய நிலையில் உள்ளன. இவை காதல், நகைச்சுவை, சாகசம், அறிவியல் புனைகதை, திகில் மற்றும் கற்கை போன்ற வகைகளைக் கொண்டவை. இவை திரைப்பட விழாப் பார்வையாளர்கள், பொது பார்வையாளர்கள், சிறார்கள் எனப் பல இலக்கு பார்வையாளர்கள் பிரிவுகளாகவும் பிரித்து வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.

    1. புதிய திரைப்படத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா?
      நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை மற்றும் எமது திரைக்கதை வங்கியிலிருந்து ஏதேனும் திரைக்கதையினை தெரிவு செய்திருப்பின் அல்லது எவ்வாறான திரைப்பட வகைகளில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் போன்ற விபரங்களுடன் உங்கள் சுயவிபரக் கோவையை எமக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கவும்.

    2. ஏற்கனவே தயாரித்த திரைப்படத்தினை ஈழக்காண்பியில் வெளியிட விரும்புகிறீர்களா?
      உங்களிடம் ஏலவே தயாரிக்கப்படட திரைப்படமோ அல்லது ஆவணப்படமோ இருப்பின், அப் படைப்பு இதுவரையில் திரையரங்கு மற்றும் திரைப்பட விழாக்கள் தவிர வேறு எந்தவித இணையத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வெளிவராத பட்சத்தில் அவற்றை ஈழக்காண்பி பிரத்தியேகமாக வெளியிட ஆவனை செய்யும். முதலில் உங்கள் திரைப்படம் பற்றிய விபரங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். ஈழக்காண்பியின் தர சோதனை அணியினர் நீங்கள் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பர்.

      ஈழக்காண்பியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அப் படைப்பு உள்ளது எனத் தர சோதனை அணியினர் கணிக்கும் பட்சத்தில் உங்களிடம் திரைப்படத்தினை இணைய வாயிலாகப் பார்ப்பதற்கான இணைப்பினை அனுப்புமாறு கோருவர். அவ்விணைப்பினை எமக்கு அனுப்பும்போது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு உங்களுடையது. பாதுகாப்புக்கள் எதற்கும் ஈழக்காண்பி பொறுப்பு ஏற்காது.


  7. எமது திரைக்கதை வங்கி:
    1. எமது திரைக்கதை வங்கியில் ஏலவே தயாரித்தவை மற்றும் தயாரிப்பில் உள்ளவை தவிர, தற்போது 16 திரைக்கதைகள், Script councling மற்றும் doctoring செய்யப்பட்டு தயாரிக்கக் கூடிய நிலையில் உள்ளன. இவை காதல், நகைச்சுவை, சாகசம், அறிவியல் புனைகதை, திகில் மற்றும் கற்கை போன்ற வகைகளைக் கொண்டவை. இவை திரைப்பட விழாப் பார்வையாளர்கள், பொது பார்வையாளர்கள், சிறார்கள் எனப் பல இலக்கு பார்வையாளர்கள் பிரிவுகளாகவும் பிரித்து வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.


  8. எமது பிரத்தியேகத் தயாரிப்புகள்:
    1. வெளியிடப்படவை:

      1. பண்டார வன்னியன் நாட்டுக்கூத்து
        அருகி வரும் ஈழத்துக் கூத்துவகைகளை ஆவணப்படுத்தும் நோக்குடன் வெண்சங்கு கலைக்கூடத்துடன் இணைந்து ஈழக்காண்பி வட்டக்களரி முறையிலான மூன்று மணித்தியாலங்கள் கொண்ட பண்டார வன்னியன் நாட்டுக்கூத்தினை சிறந்த ஒலி மற்றும் ஒளி அமைப்புகளுடன் ஆவணப்படுத்தியுள்ளது. இக்காணொளி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான துணைத்தலைப்புக்களுடன் ஈழக்காண்பியில் பிரத்தியாகமாக வெளியிடப்பட்டுள்ளது.

    2. பின் தயாரிப்பில் உள்ளவை:

      1. தாயகம்

    3. தயாரிப்பில் உள்ளவை:

      1. 8A, 1st period

    4. முன் தயாரிப்பில் உள்ளவை:

      1. ஏலோர் எம்பாவாய்
        மலையக மக்களை தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தோட்டத்தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்ட 200 வது ஆண்டை முன்னிட்டு, மலையக மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஈழத்து முக்கிய திரைப்பட செயற்பாட்டாளரும் திரைக்கதை ஆசிரியருமான திரு. ஞானாதாஸ் காசிநாதர் அவர்கள் இயக்க, ஈழக்காண்பி மற்றும் வெண்சங்கு கலைக்கூடம் இணைந்து "ஏலோர் எம்பாவாய்" எனும் முழுநீளத்திரைப்படத்திற்கான முன்தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இத்திரைப்படத்தினை 2024 தை மாதம் திரைக்குக் கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு தயாரிப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.



தற்சார்பாக இயங்க

குறைந்தபட்ச நிறைவெண்ணாக இரண்டாயிரம் பேரைத் தனது முதலாவது ஆண்டிலும் (2022), ஆரம்ப காலமான ஐந்து வருடங்களுக்குள் (2027) சீரிய நிறைவெண்ணாக இருபதாயிரம் பேரைத் தவணைக்கட்டணம் செலுத்துவோராக அனைவரின் பங்களிப்போடும் ஈழக்காண்பியால் பெற்றுக்கொள்ள முடியுமானால், அதை ஈழத்தமிழர்களுக்குப் பொதுவான ஓர் உலகளாவிய திரைத்துறை காத்திரமான முறையில் உருவெடுப்பதற்கான ஒரு மைல்கல் நிகழ்வாகக் கொள்ளலாம் என்பது இம்முயற்சியின் ஆரம்பகர்த்தாக்களின் கணிப்பு.

453
இதுவரை இணைந்துள்ளவர்கள்
2,000
இலக்கு